10-வது மற்றும் 12வது வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறாது -மத்திய கல்வி அமைச்சர்

10-வது மற்றும் 12வது வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறாது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறி உள்ளார்.

Update: 2020-12-22 13:16 GMT
படம்: ANI
புதுடெல்லி

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்  கூறியதாவது:-

10-வது மற்றும் 12வது வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறாது.தேர்வுகள் நடத்துவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். தற்போதைய சூழல் தேர்வுகள் நடத்த உகந்ததாக இல்லை. மாணவர்கள், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

10, 12வது வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறினார்.

மேலும் செய்திகள்