இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி கிறிஸ்தவ பெருமக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-25 04:01 GMT
புதுடெல்லி,

ஏசுபிரான் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகமெங்கும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ பெருமக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

'ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கையும் கொள்கைகளும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு பலத்தைத் தருகின்றன. அவரது பாதை ஒரு நியாயமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதற்கான வழியைக் காட்டட்டும். எல்லோரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கட்டும்' 

இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்