கேரளாவில் இன்று புதிதாக 5,005- பேருக்கு கொரோனா
கேரளாவில் இன்று புதிதாக 5,005- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 5- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4408 பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் 68 ஆயிரத்து 991- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றில் இருந்து 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர்.