டெல்லி ஆஸ்பத்திரியில் 19 வயது ஊழியருக்கு கொரோனா தடுப்பூசி

டெல்லி ஆஸ்பத்திரியில் 19 வயது ஊழியருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-01-18 20:19 GMT

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 19). இவர் கிழக்கு டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு பிரிவு ஊழியராக பணியாற்றி வருகிறார். ஊரடங்கின்போது, தன் வீட்டில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தினமும் மோட்டார் சைக்கிளில் சென்று வந்தார்.

அந்த ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில், கடந்த 16-ந் தேதி 45 சுகாதார பணியார்களுக்கும், நேற்று 20 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அவர்களில் மிக இளம் வயதுக்காரர் 19 வயதான சிவகுமார்தான்.

விவசாயி மகனான இவர், தான் பயமின்றி தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்