முறையாக அப்புறப்படுத்தாத முக கவசங்கள் - ஆழ்கடலில் குப்பைகளாக சேர்ந்துள்ள அவலம் - வீடியோ

முறையாக அப்புறப்படுத்தாத முக கவசங்கள் - ஆழ்கடலில் குப்பைகளாக சேர்ந்துள்ள அவலம்

Update: 2021-01-23 13:06 GMT
சென்னை,

புதுச்சேரி பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ஆழ்கடலில் குவிந்துள்ள லட்சக்கணக்கான முக கவசங்களை ஆழ்கடல் பயிற்சி வீரர் அரவிந்தன் தலைமையிலான குழுவினர் சுத்தம் செய்தனர். இது தொடர்பான வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் அட்வென்சர் என்கிற ஆழ்கடல் பயிற்சி மையம் நடத்தி வருபவர் அரவிந்த். இவர் ஆழ்கடலை சுத்தம் செய்தல், ஆழ்கடலில் தேங்கிய அசுத்தங்களைத் தூய்மை செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் தனது குழுவினருடன் புதுச்சேரி ஆழ்கடலுக்கு சென்றார். அப்போது கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட ஏராளமான குப்பைகளுடன் பொதுமக்கள் பயன்படுத்திய லட்சக்கணக்கான முககவசங்களும் தேங்கி கிடந்தன.

ஆழ்கடலில் குவிந்த முக கவசங்களை அரவிந்தன் தலைமையிலான குழுவினர் சுத்தம் செய்து வெளியே கொண்டு வந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்