விவசாயிகளின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: வேளாண் துறை அமைச்சர்

விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-25 21:35 GMT
புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டம்  இரண்டு மாதங்களை எட்டியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இதனால், மத்திய அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. 

இந் நிலையில் விவசாயிகள் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், ''விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்'' என்றார்.ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டம் வாபஸ் என விவசாயிகள் தெரிவித்துதுள்ளனர். அதேவேளையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது

மேலும் செய்திகள்