ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம்

ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-02-16 20:27 GMT
புதுடெல்லி, 

ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தோர், குணமடைந்தவர்களின் இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஆந்திர மாநிலத்தில் இன்று புதிதாக 60 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 8,88,959 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 615 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து இன்று 140 குணமடைந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,81,181 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை 7,163 பேர் பலியாகி உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று புதிதாக 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 2,781 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில் இதுவரை மொத்தம் 3,19,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து இன்று 168 குணமடைந்தனர். இதுவரை மொத்தமாக 3,15,027 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 1,257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்