டெல்லியில் புதிதாக 200 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 2 பேர் பலி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-02-24 18:21 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,38,373 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 115 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,26,331 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவுக்கு மேலும் இரண்டு பேர் உயிரிழந்தநிலையில், பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 10,905 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக 1,137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய 5 மாநில மக்கள் டெல்லிக்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி கொரோனா இல்லை என்கிற சான்றிதழுடன் வருபவர்கள் மட்டுமே டெல்லிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த கட்டுப்பாடு வருகிற 26-ந்தேதி முதல் மார்ச் 15-ந் தேதி வரை தொடரும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. 5 மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருவதால் டெல்லி அரசு இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்