மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.71 லட்சமாக உயர்வு

மத்திய பிரதேசத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,71,957 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-03-18 22:15 GMT
மும்பை,

மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 917 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,71,957 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,894 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 500 பேர் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் தற்போது 6,032 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 2,62,031 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்