கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 48 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 48 ஆயிரத்து 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update:2021-04-30 19:41 IST
பெங்களூரு,

கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 48 ஆயிரத்து 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 23 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 14 ஆயிரத்து 884 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 24 ஆயிரத்து 909 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரேநாளில் 217 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 523 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்