கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2 மருந்துகளுக்கு அனுமதி

கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2 மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி அளித்துள்ளது.

Update: 2021-06-01 10:57 GMT
புதுடெல்லி,

கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2 மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது. பம்லானிவிமாப் 700 மி.கி., எட்டெசிவிமாப் 1400 மி.கி. மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு  மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. 

மிதமான கொரோனா பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  குறையத்தொடங்கி வரும் நிலையில், தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ள இந்த புதிய மருந்துகள்,  கொரோனா சிகிச்சையில் மேலும் முன்னேற்றத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்