மராட்டியத்தில் இன்று 10 ஆயிரம் பேருக்கு கொரோனா - 14 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

மராட்டியத்தில் இன்று 10 ஆயிரத்து 910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-12 16:39 GMT
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. வைரஸ் பரவலின் இன்றைய நிலவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, மராட்டியத்தில் இன்று 10 ஆயிரத்து 697 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 58 லட்சத்து 98 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 474 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 14 ஆயிரத்து 910 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதனால், மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 31 ஆயிரத்து 767 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 95.48% என்ற அளவில் உள்ளது.

ஆனால், மராட்டியத்தில் கொரோனா தாக்குதலுக்கு இன்று 360 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்