ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 52 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-07-09 18:21 GMT
ஜார்க்கண்ட்,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும்  மெல்ல மெல்ல சரிந்து வருகிறது.
 
அதன்படி, ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,46,223 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு இல்லை. இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,119 ஆக அதிகரித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 76 பேர் கொரோனாதொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,40,055ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 449 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்