வரும் 21-ந்தேதி முதல் பெங்களூரு-சென்னை சதாப்தி அதிவிரைவு ரெயில்கள் மீண்டும் இயக்கம் - தென்மேற்கு ரெயில்வே தகவல்

வரும் 21-ந்தேதி முதல் பெங்களூரு-சென்னை சதாப்தி அதிவிரைவு ரெயில்கள் மீண்டும் இயக்கப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-15 02:21 GMT
பெங்களூரு,

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பயணிகள் வருகை குறைந்ததால் நாட்டில் பல்வேறு ரெயில்கள் நிறுத்தப்பட்டன. தற்போது பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், ஏராளமான ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு வருகிறது. இதேபோல பயணிகள் வருகை குறைவால் நிறுத்தப்பட்டிருந்த கே.எஸ்.ஆர். பெங்களூரு- எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் சதாப்தி அதிவிரைவு ரெயில்கள் (வண்டி எண்: 02028/02027) இருமார்க்கமாகவும் வருகிற 21-ந்தேதி முதல் இயங்குகிறது.

இதேபோல சித்தரோட சுவாமி உப்பள்ளி- எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07333) உப்பள்ளியில் இருந்து வருகிற 21-ந்தேதி இயங்குகிறது. மறுமார்க்கமாக எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்- சித்தரோட சுவாமி உப்பள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07334) சென்னையில் இருந்து வருகிற 22-ந்தேதி முதல் இயங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்