சத்தீஷ்கார்: தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல்கள் சுட்டு கொலை

சத்தீஷ்காரில் தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டவர்கள் உட்பட 3 நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

Update: 2021-07-15 16:14 GMT



தன்டேவாடா,

சத்தீஷ்காரில் தன்டேவாடா மாவட்டத்தில் பராஸ்பால் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து மாவட்ட ரிசர்வ் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட 2 நக்சல்கள் உட்பட 3 நக்சல்களை படையினர் சுட்டு கொன்றனர்.  அவர்களிடம் இருந்து 3 உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்கள் மற்றும் 3 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என தன்டேவாடா எஸ்.பி. அபிசேக் பல்லவ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்