மராட்டியத்தில் புதிதாக 7,761 பேருக்கு கொரோனா

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,761 - பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-07-16 19:38 GMT
மும்பை, 

மராட்டியத்தில் நேற்று புதிதாக 7 ஆயிரத்து 761 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 61 லட்சத்து 97 ஆயிரத்து 18 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 59 லட்சத்து 65 ஆயிரத்து 644 பேர் குணமடைந்து உள்ளனர். 

நேற்று மட்டும் 13 ஆயிரத்து 452 பேர் குணமடைந்தனர். இதனால் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து ஆயிரத்து 337 ஆக குறைந்து உள்ளது. மாநிலத்தில் மேலும் 167 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை தொற்றுக்கு 1 லட்சத்து 26 ஆயிரத்து 727 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தலைநகர் மும்பையில் புதிதாக 446 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை நகரில் 7 லட்சத்து 30 ஆயிரத்து 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல நகரில் மேலும் 11 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 678 ஆக உயர்ந்து உள்ளது. நகரில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 951 நாட்களாக உள்ளது. தாராவியில் புதிதாக 3 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

மேலும் செய்திகள்