மும்பை தாராவி பகுதியில் புதிய கொரோனா பாதிப்பு இல்லை

மும்பை தாராவி பகுதியில் புதிய கொரோனா பாதிப்புகள் இன்று பதிவாகவில்லை.

Update: 2021-07-17 11:52 GMT


மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் தாராவி பகுதியில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.  மராட்டியம் நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்புகளை கொண்ட மாநிலங்களின் வரிசையில் முதல் இடத்தில் உள்ளது.  அதிக உயிரிழப்புகளையும் கொண்டுள்ளது.

இந்த நிலையில், தாராவி பகுதியில் புதிய கொரோனா பாதிப்புகள் எதுவும் இன்று பதிவாகவில்லை.  இதுவரையில் 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மும்பை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்