நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன்; பிரதமர் மோடி நம்பிக்கை

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2021-07-18 14:26 GMT


புதுடெல்லி,

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடந்தது.  இதில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமை தாங்கினார்.  இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

கூட்ட நிறைவுக்கு பின்பு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாடாளுமன்ற கூட்டத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்