கர்நாடகாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 1,653 பேருக்கு தொற்று உறுதி

கர்நாடகாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-07-22 14:27 GMT
பெஙகளூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,89,994 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,293 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,572 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,28,983 ஆக அதிகரித்துள்ளது. 

கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது வரை 24,695 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்