கர்நாடகத்தில் புதிதாக 1,285 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-08-02 16:58 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 25 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில்  இன்று 1,285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,08,284-ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 25 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,612-ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 1,383 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் 28,47,627-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 24,021 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றனர்.

மேலும் செய்திகள்