இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் சிறுவன் பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை

இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டு பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-02 19:21 GMT
காந்திநகர், 

குஜராத்தின் கட்ச் மாவட்டம் காவ்டாவில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டு பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த 15 வயது சிறுவன் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தான். உடனே அவனை பிடித்து வீரர்கள் விசாரித்தனர்.

அப்போது பாகிஸ்தானின் தர்பர்கார் மாவட்டம் சிந்து சகிசோக் பகுதியை சேர்ந்த அந்த சிறுவன், குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறி இந்திய எல்லைக்குள் நுழைந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவன் உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

மேலும் செய்திகள்