ஜார்க்கண்ட்; மின்னல் தாக்கியதில் 5 பேர் பலி, 3 பேர் காயம்

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-08-06 23:35 GMT
ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட அனைவரும் வயல்வெளியில் விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் என்று கூறப்படுகிறது. 

உயிரிழந்த 5 பேரில் 3 பேர் பெண்கள் ஆவர். காயம் அடைந்த அனைவரும் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.  உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு ஏற்பட்டுள்ளது.  மின்னல் தாக்கி விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்