பிரதமர் மோடி பிறந்த நாளில் 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி: மத்திய பிரதேச அரசு

பிரதமர் மோடி பிறந்த நாளில் மத்திய பிரதேசத்தில் 32 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட உள்ளது.

Update: 2021-09-13 21:29 GMT


போபால்,

மத்திய பிரதேசத்தில் வருகிற 16ந்தேதிக்குள் தகுதியுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

இந்த நிலையில், உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா செய்தியாளர்களிடம் கூறும்போது, வருகிற 17ந்தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாளில் மத்திய பிரதேசத்தில் 32 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்படும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்