மும்பையில் பள்ளிகள் திறப்பு பற்றி தீபாவளி பண்டிகைக்கு பின் முடிவு; மேயர் பேட்டி
மராட்டியத்தின் மும்பை நகரில் தீபாவளி பண்டிகைக்கு பின் பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்யப்படும் என மேயர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
புனே,
நாட்டிலேயே மிக அதிக அளவாக மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகள் காணப்படுகின்றன. இதேபோன்று உயிரிழப்புகளும் அதிகரித்து உள்ளன. இந்த நிலையில், தடுப்பூசி பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மராட்டியத்தின் மும்பை நகர மேயர் கிஷோரி பட்னாகர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, மும்பை நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளிகள் திறப்பு பற்றி தீபாவளி பண்டிகைக்கு பின் முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.