ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

Update: 2021-10-01 01:49 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் உள்ள ரகமா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு  படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இருதரப்பினருக்கும் இடையே நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில், பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. அப்பகுதியில் வேறு ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா? என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்