டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்; பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம்

டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-09 10:47 GMT
புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறியுள்ள கெஜ்ரிவால், அதுபோன்ற ஒரு  சூழலை தவிர்க்க தனது அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.  

டெல்லிக்கு மின் விநியோகம் அளிக்கும் நிறுவனங்களுக்கு தேவையான நிலக்கரி மற்றும்  எரிவாயு கிடைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு , தான் கடிதம் எழுதியுள்ளதாகம் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.  

கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே நிலக்கரி தட்டுப்பாடு நீடிப்பதாக பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாகவும் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்