கர்நாடகாவில் மேலும் 373- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 373- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 373 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்து 81 ஆயிரத்து 400 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுடன் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,895- ஆக உயர்ந்துள்ளது.
தொற்றில் இருந்து இன்று 611 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 9,906- ஆக உள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக பெங்களூரு நகரத்தில் 146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.