பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.28 ஆயிரம் கோடி மானியம் - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

‘ரபி’ பருவத்துக்கு பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கு ரூ.28 ஆயிரம் கோடி மானியம் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2021-10-12 22:28 GMT
புதுடெல்லி,

இந்த ஆண்டு அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரையிலான ‘ரபி’ குளிர்கால விதைப்பு பருவத்துக்கு பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கு மொத்தமாக ரூ.28 ஆயிரத்து 655 கோடி மானியம் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு, இந்த மானியத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்