பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.

Update: 2021-10-23 16:12 GMT
சென்னை,

பிரதமர் மோடியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி  இன்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. 
 மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தமிழக கவர்னர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழக  கவர்னராக  பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து இருப்பது இதுவே முதல்  முறையாகும். முன்னதாக அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் டெல்லி சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய  மந்திரி  அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசியது நினைவிருக்கலாம். 

மேலும் செய்திகள்