நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-10-23 17:58 GMT


புனே,

மராட்டியத்தில் நவநிர்மாண் சேனா தலைவராக இருப்பவர் ராஜ் தாக்கரே.  அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதேபோன்று அவரது தாயார் மற்றும் சகோதரி ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனை லீலாவதி மருத்துவமனையின் மருத்துவர் ஜலீல் பார்க்கர் இன்று உறுதி செய்துள்ளார்.  தாக்கரே மற்றும் அவரது சகோதரி லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என மருத்துவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

 

மேலும் செய்திகள்