கேரளாவில் நக்சலைட்டு சரண்
கேரளாவின் வயநாட்டில் நக்சலைட்டு ஒருவர் சரண் அடைந்து உள்ளார்.
வயநாடு,
வடமாநிலங்களில் ஒன்றான சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில், தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளில் சமீபகாலமாக நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனை தொடர்ந்து மூன்று மாநில போலீசார் தொடர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மாவோயிஸ்ட் இயக்கத்தின் கபினி பகுதி தலைமை கமாண்டர் ராமு (வயது 37) என்பவர் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஐ.ஜி. அசோக் யாதவ் முன்னிலையில் சரண் அடைந்துள்ளார். இதனால், கேரளாவில் நக்சலைட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.