தேசிய ஒற்றுமை தினம்: ஜனநாயகத்தை பாதுகாப்பது தான் படேலுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி - ராகுல்காந்தி

ஜனநாயகத்தை பாதுகாப்பது தான் சர்தார் வல்லபாய் படேலுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக அமையும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-31 10:31 GMT
புதுடெல்லி,

இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாக சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் பதிவில்,

இன்று நமது ஜனநாயகத்தின் தூண்கள் பலவீனம் அடைந்து வரும் சூழ்நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்பை நாம் நினைவு கூர்வோம். இந்த தூண்களை கட்டமைத்த காங்கிரஸ் தலைவர்களில் அவர் முக்கிய குரலாக இருந்தார். 

ஜனநாயகத்தை பாதுகாப்பது தான் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்