நாட்டு மக்களுக்கு இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி உரை...!

பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

Update: 2021-11-19 03:19 GMT
புதுடெல்லி,

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா காலத்தில் ஊரடங்கு, கொரோனா தடுப்பூசி உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகளின் போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். இதனால், நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றும் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காலை 9 நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். 

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று குருநானக் தேவ் ஜியின் பிறந்த நாள். பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் மகோபாவில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். அதன்பின்னர் ‘ரக்‌ஷா ரக்‌ஷா சம்பர்பன் பர்’ நிகழ்ச்சிக்காக அவர் ஜான்சி செல்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்