கர்நாடகாவில் விடுதியில் தங்கி இருந்த 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கர்நாடகாவில் விடுதியில் தங்கி இருந்த 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தார்வாத்,
கர்நாடகாவின் தார்வாத் நகரில் மஞ்சுஸ்ரீநகர் பகுதியில் உள்ள எஸ்.டி.எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் 2 விடுதிகளில் தங்கி இருந்த 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றி மாவட்ட கலெக்டர் நிதீஷ் பாட்டீல் கூறும்போது, 100 மாணவர்களின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். கல்லூரியின் 2 விடுதிகளும் சீல் வைத்து மூடப்பட்டு உள்ளன.