காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீனுடன் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் கைது
காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீனுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா நகரில் ஹிஜ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்கள் முசாமில் அயூப் பட் மற்றும் சுஹைல் மன்சூர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் அவந்திபோரா பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து ஏ.கே.-47 ரக துப்பாக்கியின் தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.