உ.பி. சிறுவன் கொலை: சி.பி.ஐ. விசாரணை வேண்டும்; பிரியங்கா காந்தி வலியுறுத்தல்
உத்தர பிரதேசத்தில் சிறுவன் கொலையில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.
பண்டா,
உத்தர பிரதேசத்தின் பண்டா நகரில் 14 வயதுடைய அமன் திரிபாதி என்ற சிறுவன் கொல்லப்பட்டான். கடந்த மாதம் நடந்த இந்த சம்பவத்தில் நீதி கேட்டு சிறுவனின் தாயார் போராடி வருகிறார்.
எனினும், குற்றவாளிகள் அரசியல் தஞ்சமடைந்து உள்ளனர் என கூறப்படுகிறது. இதுபற்றி
உத்தர பிரதேச காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரில் கூறும்போது, கொடூர கொலையான 14 வயதுடைய அமன் திரிபாதியின் வழக்கில் நீதி கிடைக்க செய்ய வேண்டும். ஒரு மாத காலத்திற்கு சிறுவனின் தாயார் நீதி வேண்டி போராடி வருகிறார்.
அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான உரிமை உள்ளது. குற்றவாளிகளுக்கு அரசியல் தஞ்சம் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும். உடனடி சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.