டெல்லியில் மின்சாரம் தாக்கியதில் 2 சகோதரர்கள் உயிரிழப்பு
டெல்லியில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கியதில் 2 சகோதரர்கள் உயிரிழந்து உள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியின் சத்தார்பூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் கோவிந்த் (வயது 25) மற்றும் தேவிந்த் (வயது 22). இந்நிலையில், அவர்களுடைய வீட்டில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கியதில் 2 சகோதரர்களும் உயிரிழந்து உள்ளனர்.
அவர்களை காப்பாற்ற சென்ற உறவினருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்து விட்டனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.