கேரளாவில் இன்று 3,277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-06 14:46 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 3 ஆயிரத்து 277 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 51 லட்சத்து 69 ஆயிரத்து 198 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 833 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்து 86 ஆயிரத்து 44 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 41 ஆயிரத்து 768  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏற்கனவே உயிரிழந்து இறப்பு கணக்கில் சேர்க்கப்படாத 138 உயிரிழப்புகள் தற்போது மறு கணக்கீட்டின் படி தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 768 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்