டெல்லியில் புதிதாக 24,383 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-14 14:16 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. டெல்லியிலும்  கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று டெல்லி சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 24,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,70,966 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 30.64 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

டெல்லியில் இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 34 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,305 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 26,236 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,53,388 ஆக உயர்ந்துள்ளது. 

டெல்லியில் தற்போது 92,273 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்