சீனா ஆக்கிரமித்துள்ள இந்திய நிலப்பகுதியை மீட்பது எப்போது? ராகுல்காந்தி கேள்வி
சீனா ஆக்கிரமித்துள்ள இந்திய நிலப்பகுதியை மீட்பது எப்போது? என பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அருணாசலபிரதேச சிறுவனை சீனா ஒப்படைத்தது ஆறுதல் அளிக்கிறது. அதுபோல், சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய நிலப்பகுதி எப்போது மீட்கப்படும், பிரதமரே?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.