காஷ்மீரில் பனியால் 6 படகுகள் மூழ்கின

காஷ்மீரில் கடும் பனியால் 6 படகுகள் நீரில் மூழ்கி உள்ளன

Update: 2022-02-24 21:03 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக, தால் ஏரி மற்றும் ஜீலம் நதியில் 6 படகுகள் நீரில் மூழ்கி உள்ளன.

“பனிப்பொழிவு மிகவும் அதிகமாக இருப்பதாகவும், இதனால், பனியின் எடையைத் தாங்க முடியாமல் படகுகள் மூழ்க தொடங்கியுள்ளன. தால் ஏரியில் ஐந்து படகுகளும், ஜீலம் நதியில் ஒரு படகும் மூழ்கியது” என்று சவாரி படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகி கூறினார்.

மேலும் செய்திகள்