உத்தரபிரதேசம்: தேசிய கீதத்தை அவமதித்ததாக 3 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு

உத்தரபிரதேசத்தில் தேசிய கீதத்தை அவமதித்த 3 வாலிபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2023-01-28 22:54 GMT

கோப்புப்படம்

மீரட்,

உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்துக்கு உட்பட்ட இட்கா பகுதியில் 3 இளைஞர்கள் தேசிய கீதத்தை அவமதிப்பது போன்ற வீடியோ பதிவு ஒன்று மாநிலம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அதாவது தேசிய கீதம் ஒலிக்கும்போது முதலில் சல்யூட் அடிக்கும் அந்த இளைஞர்கள், பின்னர் ஆபாசமாக நடனமாடுவது போன்று அந்த வீடியோ உள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வீடியோவில் இருந்தவர்கள் இட்கா பகுதியை சேர்ந்த அட்னான், ருகால் மற்றும் ஒருவர் என 3 நண்பர்கள் என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், அதில் அட்னானை பிடித்து விசாரித்தும் வருகின்றனர்.

3 வாலிபர்கள் தேசிய கீதத்தை அவமதித்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்