சிக்கமகளூருவில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 93 ஆயிரம் மோசடி

சிக்கமகளூருவில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 93 ஆயிரம் மோசடி சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-10-02 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு (மாவட்டம்) டவுன் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் நாகேஷ் (வயது35). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நாகேஷ் ஆன்லைன் மூலம் தனது செல்போன் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்தார். ஆனால் அவரது எண்ணிற்கு ரீசார்ஜ் ஆகவில்லை. ஆனால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைக்கு தொடர்பு கொண்டு பேசினார்.

அதில் பேசிய நபர் தங்களது செல்போன் நம்பருக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை கூறும்படி கூறியுள்ளார். இதனை நம்பிய நாகேஷ் ஓ.டி.பி. எண்ணை அந்த நபருக்கு கூறினார். இதையடுத்து நாகேசின் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், தங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ. 83 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என இருந்தது.

இதனை பார்த்து நாகேஷ் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். இதுகுறித்து நாகேஷ் சிக்கமகளூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாார்கள்.

மேலும் மர்மநபரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்