லாரி டிரைவர் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

லாரி டிரைவர் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-11-01 18:45 GMT

மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் குருவாயனகெரே குவெட்டு சிவாஜிநகரை சேர்ந்தவர் பிரதீப்(வயது 36). லாரி டிரைவர். இதேபோல் மொடியந்தட்கா நியாயதார்பு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(வயது 32). இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.கடந்த 2017-ம் ஆண்டு பெல்தங்கடியில் உள்ள கலியா பகுதியில் வைத்து 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பிரதீப்பை, தினேஷ் கம்பியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பிரதீப் உயிரிழந்தார். இதையடுத்து தினேசை, போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை மங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி மல்லிகார்ஜூன சுவாமி தீர்ப்பு கூறினார். அதில் பிரதீப்பை தினேஷ் கொலை செய்தது நிரூபணமானதால் அவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், கொலையான பிரதீப்பின் தாய்க்கு இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்