முன்பதிவில்லா ரெயில் டிக்கெட்டுகள்- வீட்டில் இருந்தே எடுக்கலாம்- யுடிஎஸ் செயலியில் புது வசதி

யூடிஎஸ் செயலி மூலம் ரெயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

Update: 2024-04-26 02:35 GMT

புதுடெல்லி,

கவுன்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி மூலமாக முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட், மின்சார ரெயில்களுக்கான டிக்கெட் ஆகியவற்றை பெறும் வசதி உள்ளது.

இருந்த போதிலும், 'ஜியோ பென்சிங் என்ற கட்டுப்பாடுகள் இருந்ததால் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே இருந்து டிக்கெட்களை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், ஜியோ பென்சிங்கின் வெளிப்புற எல்லையை ரெயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.

இதனால் யூடிஎஸ் செயலி மூலம் ரெயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், டிக்கெட் எடுத்த 2 மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் நிலையத்தை அடைந்துவிட வேண்டும். இத்தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்