மந்திரி தினேஷ் குண்டுராவ் நாளை மங்களூரு வருகை

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மந்திரி தினேஷ் குண்டுராவ் நாளை மங்களூரு வருகிறார்.

Update: 2023-09-09 18:45 GMT

மங்களூரு-

கர்நாடக மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியும் தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு மந்திரியுமான தினேஷ் குண்டுராவ் நாளை (திங்கட்கிழமை) மங்களூருவுக்கு வர உள்ளார். நாளை காலை 8.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மங்களூருவுக்கு வரும் தினேஷ் குண்டுராவ், நேரு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

பின்னர் மதியம் 12 மணிக்கு பெல்தங்கடி தாலுகா பஞ்சாயத்து கட்டிடம் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து மதியம் 2.30 மணி அளவில் பெல்தங்கடி தாலுகா அலதண்டகி-தர்மஸ்தலா இடையே புதிய பஸ் சேவையை தினேஷ் குண்டுராவ் தொடங்கி வைக்கிறார்.

அதன் பின்னர் மதியம் 3.30 மணிக்கு வேனூரில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு இரவு 9.50 மணிக்கு மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் புறப்பட்டு செல்கிறார்.


Tags:    

மேலும் செய்திகள்