சட்டமன்ற தேர்தல்; மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

டிசம்பர் 3 ஆம் தேதி மிசோரம் மாநில மக்களுக்கு விசேஷ தினம் என்பதால் வாக்கு எண்ணிக்கை ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-12-01 15:19 GMT

ஐஸ்வால், 

மிசோரம் மாநிலத்தில் கடந்த 7 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 3 ஆம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஒருநாள் தள்ளிவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்