நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் பொறுப்பேற்பு

நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Update: 2022-07-12 00:43 GMT

புதுடெல்லி,

'நிதி ஆயோக்' தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தனக்கு இந்த வாய்ப்பை அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

இவர் உத்தரபிரதேச பிரிவை சேர்ந்த 1981-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவருக்கு குடிநீர் மற்றும் தூய்மை பணிகள் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. அதனால். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை அமல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுவரை மத்திய குடிநீர் மற்றும் தூய்மை பணிகள் அமைச்சகத்தின் செயலாளராக இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்