கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க புதுச்சேரி அரசு முடிவு

துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-04 13:49 GMT

கோப்புப்படம் 

புதுச்சேரி,

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேரிடர் மேலாண்மை துறை மூலம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்