13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 49 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முனீரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-02-09 22:57 GMT

வயநாடு,

வயநாடு மாவட்டம் கல்பெட்டா அருகே பரியாரம் பகுதியை சேர்ந்தவர் முனீர் (வயது 29). இவர் 6.12.2021 அன்று 13 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது.

இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் கல்பெட்டா போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை முனீர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முனீரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கல்பெட்டா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ஆர்.சுனில் குமார், சிறுமியை முனீர் பாலியல் பலாத்காரம் செய்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு 49 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2.27 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பபிதா ஆஜராகி வாதாடினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்